Site Visitor

Saturday, November 27, 2010

அம்மன் கமலாம்பிகை

திருவாரூர் தியாகராஜ

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தமிழகத்தின் புகழ்பெற்ற தலம். இக்கோவில் மிகவும் பழமையானதாகும். தியாகராஜர் என்றால் "கடவுள்களுக்கெல்லாம் ராஜா' என்று பொருள்.

 திருவாரூர் என்றாலே தேர் தான் நினைவிற்கு வரும். இத்தேர் தமிழகத்திலுள்ள தேர்களிலேயே மிகப் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும்.  இதனால் "திருவாரூர் தேரழகு" என்று எல்லோராலும் போற்றப்படுகிறது.
மாசி மாத அஸ்தத்தில் கொடி ஏற்றி பங்குனி மாதம் ஆயில்யத்தில் தேரோட்டம்
நடைபெறுகிறது .இத்தேரோட்டத்தை காண கண் கோடி வேண்டும்.  இத்தேரோட்டத்தை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதும். 


பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தினமும் மாலை
பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.

இதை "நித்திய     பிரதோஷம்' என்பார்கள். இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசிப்பதாக ஐதீகம். எனவே,   இந்தக் கோயிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின்     அருளையும் பெற்ற புண்ணியம்  கிடைக்கும்.

மூலவர் வன்மீகிநாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் மறையும். அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.

Wednesday, November 17, 2010